Saturday, March 31, 2018

ஸ்மார்ட் கிளாஸ் கலக்கும் அரசுப் பள்ளி


ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் கூட்ட முடிவுகள்.

*அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்ட்டோ-ஜியோ*
##################

*இன்றைய(31.03.2018)ஜேக்டோஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*

*4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*

*முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

த.ராஜ் சுதாஸ்
மாவட்ட செய்தித் தொடர்பு செயலாளர்
விருதுநகர்
$$$$$$$$$$$$$$$$$

Friday, March 30, 2018

ஜூன் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு புதிய பாட திட்டத்திற்கான பயிற்சி ?

Saturday, March 31


புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்.

2011-12,12-13 ,14-15 Science BT Regulation Order.


Thursday, March 29, 2018

ஜாக் டோ-ஜியோ ஆலோசனைக் கூட்டம்

*TNHHSSGTA JACTTO-GEO NEWS*
*A.மாயவன் ஒருங்கிணைப்பாளர்*
@@@@@@@@@@@@
*31.3.18 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெறும்.*

த.ராஜ் சுதாஸ்
மாவட்ட செய்தித் தொடர்பு செயலாளர்
விருதுநகர் .

Wednesday, March 28, 2018

29.03.18 செய்திகள்.

* த.ராஜ் சுதாஸ்*
மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
விருதுநகர்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

🍎🍎இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்

🍎🍎Treasuries and Accounts- Working day form PAOs/Treasuries for Sattlement on 31.03.2018-orders requesting of-Regarding

🍎🍎அரசு ஊழியர்கள் தமிழை பயன்படுத்த வேண்டும்!!!

🍎🍎தமிழரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட்

🍎🍎PGTRB - இல் இட ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

🍎🍎Treasury : 31ம் தேதி வேலை நாள் - Proceedings_

🍎🍎தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு

🍎🍎தந்தை இறந்த துக்கத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

🍎🍎பள்ளி ஆசிரியராக பணிபுரியும் "ரோபோ

🍎🍎65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை:-கலெக்டர் வேதனை!!

🍎🍎ஏற்கனவே அறிவித்ததைவிட கூடுதலாக 20 ஆயிரம் பணியிடங்கள்:-ரெயில்வே துறை அறிவிப்பு!!!

🍎🍎6முதல் 9 வகுப்புகளுக்கான‌ மூன்றாம் பருவத் தேர்வு குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை வெளியீடு!!!

🍎🍎மக்களுக்கு முக்கியச் செய்தி: வங்கிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!

🍎🍎சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு!!!

🍎🍎2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!!!

🍎🍎குப்பையாக்கப்பட்ட கணினி பாடபுத்தகம் RTI தந்த அதிர்ச்சி தகவல்..

🍎🍎சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

🍎🍎அரசுப்பள்ளியில் புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி.

📌குறள் எண்: 754 / பொருட்பால் / பொருள்செயல்வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

 ஈட்டும் வகை அறிந்து எவருக்கும் தீங்கு செய்யாமல் நேர்மையாக வந்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்.

Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight. The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

Sunday, March 18, 2018

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
மார்ச் 24 மாவட்ட தலைநகரங்களில் ஜாக் டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

TNHHSSGTA VIRUDHUNAGAR


அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...