Saturday, April 7, 2018

அற்புதமான பொது அறிவு. ( த.ராஜ் சுதாஸ் அரசு உயர்நிலைப் பள்ளி, பேரா பட்டி)

      அற்புதமான
     பொது அறிவு


👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  *ஒட்டகப்பால்*.

👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
*கங்காரு எலி*.

👉துருவக் கரடிகள் அனைத்துமே *இடது கை* பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – *கரடி*.

👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் *கார்பன் மோனோ ஆக்சைடு* என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் *பிறந்தநாள்* அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு *மூன்று இதயம்* இருக்கும். அதன் ரத்தம் *நீல நிறத்தில்* இருக்கும்.

👉குரங்குக்கு இரண்டு *மூளை* இருக்கிறது.

👉சூரியனின் வயது *470* கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய *பாறைகளை* கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.

👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் *ஜூலியஸ் சீசர்*. அதனால்-தான் இந்த முறைக்கு *சீசரியன்* என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் *அழுதால்* கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் *100* கேள்விகள் கேட்கும்.

👉தைவான் நாட்டில் உள்ள *மூன்யூச்* மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு *சிங்கம்*. ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் *15* ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் *சிங்கம்* கர்ஜிக்கும்.

👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – *சிங்கம்*.

👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் *ரத்தத்தால்* எழுதப்பட்டது.

👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – *ஒட்டகம்*.

👉இலைகள் உதிர்க்காத மரம் – *ஊசி இலை மரம்*.

👉காட்டு வாத்து *கருப்பு* நிறத்தில் தான் முட்டையிடும்.

👉குளிர் காலத்தில் *குயில்* கூவாது.

👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் *மூன்று மாதங்கள்* மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற *மோனாலிச ஓவியம்* இடது கையால் வரையப்பட்டது.

👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி *ஒன்பது நாள்* வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.

👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – *இதயம்*.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – *இதயம்*.

👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் *3100* பேர் தான்.

👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – *ஈரிதழ் சிட்டு*.

👉வால்டிஷ்ணி மொத்தம் *32* ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉ஒருதலைமுறை என்பது *33* ஆண்டுகள்.

👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – *புருஸ்லீ*.

👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை *குளிக்காமல்* தன் கூட்டுக்குள் நுழையாது.

👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி *ஆரஞ்சு* நிறத்தில் இருக்கும்.

👉சீல்வண்டுகள் *17* ஆண்டுகள் தூங்கும்.

👉யானை, குதிரை *நின்று* கொண்டே தூங்கும்.

👉நீர் நாய் *ஒன்றரை* நிமிடம் மட்டுமே தூங்கும்.

👉டால்பின் *ஒரு கண்* விழித்தே தூங்கும்

👉புழுக்களுக்கு *தூக்கமே* கிடையாது.

👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் *6* மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Friday, April 6, 2018

ஆங்கிலத்தில் அசத்திய மாணவி

பள்ளி முப்பெரும் விழாவில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசுப்பள்ளி மாணவி


.

அனிதா சாட் தயாரித்த மாணவி .

Friday, 6 April 2018

‘அனிதா சாட்’ என்ற புதிய செயற்கைகோளை தயாரித்தமாணவி ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு!!!

சென்னை தலைமை செயலகத்தில் ‘அனிதா சாட்’ என்ற செயற்கைகோளை உருவாக்கிய
திருச்சியை சேர்ந்த மாணவி வில்லட் ஓவியா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த மகத்தான சாதனை படைத்ததற்காக மாணவி வில்லட் ஓவியாவை, அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பாக உண்ணாவிரதம் நடத்தினோம். சுப்ரீம் கோர்ட்டு மூலமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.புதிய பாடத்திட்டத்தின்கீழ் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் மே மாத இறுதிக்குள் புதிய புத்தகங்கள் தயாராகிவிடும். இதர வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டிற்குள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வானவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 9-ந்தேதி 9 கல்லூரிகளில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள முழுமையான பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.செயற்கைகோள் வடிவமைத்த மாணவி வில்லட் ஓவியா நிருபர்களிடம் கூறியதாவது. உலகில் சவாலாக இருப்பது புவி வெப்பமயமாதல். இதனால் பல்வேறு விளைவுகளை நம் சந்தித்து வருகிறோம்.

குறிப்பாக நமது புவி வெப்பமயமாதலின் காரணமாக எந்த அளவிற்கு மாசுபட்டுள்ளது என்பதை கண்டறிய இந்த புதிய செயற்கைகோளை தயார் செய்துள்ளேன். மே மாதம் 6-ந்தேதி மெக்சிகோவிலிருந்து இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகளை செய்துவருகிறேன். இதற்குஊக்கமளித்துவரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்

Thursday, April 5, 2018

அரசுப் பள்ளியில் பசுமைப் படை அமைத்த ஆசிரியர்.

அரசுப்பள்ளியில் பசுமைப்படை அமைத்த ஆசிரியர்


பசுமைத்தலைமையாசிரியர் திரு அ.சீ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்.

மார்ச் 20உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

மார்ச் 21 உலகக்காடுகள் தினம்.

 மார்ச் 22 உலகத்தண்ணீர்தினம்.

வரும் ஏப்ரல் 22 உலக பூமி தினம்








அனைத்தையும் முன்னிட்டு எங்கள் பள்ளி  ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள். பொதுமக்களுக்கும் 300 கன்றுகள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரையும்  வழங்கக்கூறினேன். மகிழ்வுடன் வழங்கினார்கள். பள்ளியின் ஆரம்பத்தில் மாணவர்களின் பிறந்தநாள்களுக்கு கன்றுகள் வழங்கிவந்தேன். இடையில் தண்ணீர் பிரச்சினையால் கன்றுகளை வாங்கி வைக்க இயலவில்லை தற்போது மொத்தமாக இந்நாட்களை நினைவுகூறும் வகையில் வழங்கினேன் உங்கள் வாழ்த்துக்களோடு ஆனையூரில் மேலும் பசுமை தழைக்கட்டும். வழங்கப்பட்ட கன்றுகளில் 1. கொய்யா, பலா, நெல்லி இரண்டுவகை, நாவல், எலுமிச்சை என பழவகைகளையே வழங்கினேன். பழங்கள் என்றால் நல்ல ஆர்வமாக வளர்ப்பார்கள் என்ற நோக்கமும் பறவைகளுக்கும் அணில்போன்ற உயிர்கள் அழியாமல் உணவுகிடைக்கவும் இந்த செயலை மேற்கொண்டேன்.

+2 பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைகின்றது.


Tuesday, April 3, 2018

அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க முடிவு .


500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ..

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.
 நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்

Sunday, April 1, 2018

அ.மாயவன் சூளுரை - மே - 8 கோட்டை முற்றுகை

Sunday, 1 April 2018

முற்றுகை போர் மே 8--அ.மாயவன் சூளுரை..

*மே 8 ல் கோட்டை -சைதாப்பேட்டை வரை முற்றுகை போர்:*
நிறுவனர்  அ.மாயவன் அறிவிப்பு
       புதிய பென்சன் திட்டத்தை அடியோடு குழி தோண்டி புதைத்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக கோரி மே 8-ம் தேதி சென்னை கோட்டை முதல் சைதாப்பேட்டை வரை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் அறிவித்துள்ளார்.
    மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து நிறுவனர் அ. மாயவன் பேசியது:
   ஆசிரியர்களின் பிரச்சினைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும்.  இந்த உயரிய லட்சியத்துடன், குறிக்கோளுடன் சங்கம் செயல்படுகிறது.
  சங்கத்துக்கு யார் தீங்கு விளைவித்தாலும், உரிமைக்கு மற்றும் வளர்ச்சிக்கு யார் தடையாக இருப்பினும் முட்டை ஓட்டுக்குள் கருவான கோழிக்குஞ்சு எவ்வாறு ஓட்டை
உடைத்துக்கொண்டு வெளியில் வருவதை போன்று நாமும் வெளியே வருவோம்.
    நமது கழகம் ஜாதி, மத பாகுபாடற்ற இயக்கம். நாம் அனைவரும் ஓர் தாய் வயிற்று பிள்ளைகள்.
   மனிதம் என்ற கயிற்றால் இணைந்துள்ளோம்.
நல்ல மணம் பரப்பும்  மலர்கள் இந்த மாவட்டத்தில் பூத்து குலுங்குகின்றன. அந்த மணம் அனைத்து பள்ளிகளில் கவ்வ வேண்டும்.
    22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் கழகம் இது. அடுத்த தேர்தலில் உறுப்பினர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர அனைவரும் பாடுபட வேண்டும்.
    *இந்த இயக்கம் அரசாங்கத்தை எதிர்க்கக்கூடிய போர் வாள்.* இதர சங்கத்தினர் போல அரசோடு சமரசம் செய்துகொள்வதி ல்லை. கோரிக்கைகளை வென்றெடுப்பதே நமது குறிக்கோள்.
*மே 8 ம் தேதி சென்னை கோட்டையில் வாழ்வா? சாவா?  போராட்டம்.* சி.பி.எஸ். திட்டத்தை  குழி தோண்டி புதைக்கும் நாள்.
   ஜாக்டோ-ஜியோ *போராட்டத்தின் போது நமது சங்கப் பொறுப்பாளர்கள் 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு 55 நாட்கள் வெளியில் இருந்தனர்.*
வேறு எந்த சங்கத்திலும் யாரையும்  இடைநீக்கம் செய்யவில்லை.
  விடைத்தாள் திருத்தும் உள்ளூர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் உழைப்பூதியம் உர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தோம். இல்லை எனில் என் சட்டையை பிடித்து உலுக்குங்கள் என கேட் மீட்டிங்கில் பேசியிருந்தேன். *இப்படி எந்த சங்கமும் துணிச்சலாக பேசவில்லை.*
   இதற்காக உரிமை கொண்டாட வேண்டியவர்கள் நாம் தான். ஆனால் யார் யாரோ உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.
   சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய, 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை அளிக்க அரசு நினைத்தால் வழங்கலாம். இல்லையெனில் எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் ஆலோசனை தருகிறோம்.
  இல்லை என்றால் மே 8 ம் தேதி சென்னை கோட்டை முதல் சைதாப்பேட்டை வரை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அனைத்து ஆசிரியர்கள் சாரை சாரையாய்  வர வேண்டும். குதிரைப்படை, ராணுவப் படையை ஏவி விட்டாலும் கோரிக்கைகள் வெல்லும் வரை போராட்டம் ஓயாது என்றார் அவர்.
  

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...